[0:00]கல்பனா சாவ்லா 1962-ல இந்தியாவுல ஹரியானா பக்கத்துலதான் பிறந்தாங்க. இவங்களுக்கு சின்ன வயசுல இருந்தே வானத்துல பறக்குற பிளைட்ட பார்த்துட்டு தானும் அதுல ஒரு நாள் பறக்கணும்னு சொல்லி நினைக்கிறாங்க. அதுக்கப்புறம் ஸ்கூல் எல்லாம் படிச்சு முடிச்சிட்டு அவங்க அப்பா கிட்ட போய் ஏரோனெட்டிகல் இன்ஜினியரிங் படிக்கிறேன்னு சொல்றாங்க. இதை கேட்ட அவங்க அப்பாவும் காலேஜ்ல சேர்த்து விடலாம்னு போறாங்க. ஆனா ஏரோனெட்டிகல் டிபார்ட்மென்ட்ல ஒரு பொண்ணுங்க கூட இல்லை. இருந்தாலும் பரவாயில்லைன்னு சொல்லிட்டு காலேஜ் எல்லாம் படிச்சு முடிச்சிட்டு யுஎஸ் போறாங்க. அங்க விண்வெளி சம்பந்தமான டிகிரி படிச்சு முடிச்சிட்டு ஒரு பையனை லவ் பண்ணி தன்னோட 26 வயசுல மேரேஜும் பண்ணிக்கிறாங்க. அதுக்கப்புறம் நாசாவில ஒர்க் பண்ண ஒரு ஆப்பர்சுனிட்டி கிடைக்குது. அங்கேயே விண்வெளிக்கு போய் ஆராய்ச்சி பண்றதுக்கு தேவையான ட்ரைனிங் எல்லாமே எடுத்துக்கறாங்க. கடைசியா அவங்க நினைச்ச மாதிரி தன்னோட 35 வயசுல விண்வெளிக்கு போயிட்டு பூமியை 252 டைம் சுத்தி வந்து தேவையான சயின்ஸ் எக்ஸ்பிரிமென்ட் எல்லாமே முடிச்சிட்டு 15 நாள், 16 மணி நேரம் கழிச்சு சக்சஸ்ஃபுல்லா பூமியில் வந்து லேண்ட் ஆனாரு. இதை பார்த்த நாசா மட்டும் இல்ல மொத்த இந்தியாவுமே கல்பனா சாவ்லாவை தலையில தூக்கி வச்சு கொண்டாட ஆரம்பிச்சாங்க. அடுத்த அஞ்சு வருஷம் கழிச்சு திரும்பவும் விண்வெளிக்கு போறாங்க. ஆனா இந்த டைம் பூமியில் லேண்ட் ஆவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னாடி வெடிச்சு சிதறுது. அதுல இவங்களோட மொத்தம் ஏழு பேர் இறந்து போறாங்க. இவங்க அன்னைக்கே இறந்து போயிருந்தாலும் இன்னைக்கு வரைக்குமே இவங்களோட பேர் உலகெங்கும் பேசிக்கிட்டுதான் இருக்கு.
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS



