[0:00]சந்தியா திருக்குறள்ல இருந்து சில ஃபேக்ட்ஸ் கேக்குறேன் சொல்லு. ஓகேங்க. திருக்குறள்ல எத்தனை மலர் குறிப்பிட்டிருக்காங்க? ரெண்டு மலர் அணிச்சம், குவளை. எத்தனை விதை? ஒரு விதை, குன்றிமணி. எத்தனை பழம்? ஒரு பழம், நெருஞ்சி பழம். எத்தனை மரம்? பனை, மூங்கில் என்ற ரெண்டு மரம். திருக்குறள்ள எந்த உயிரெழுத்து பயன்படுத்தல? அவ் என்ற உயிரெழுத்த பயன்படுத்தாம, அ இவ அப்படின்னு திருவள்ளுவர் பயன்படுத்திருக்காரு. திருக்குறள்ல எந்த எண் பயன்படுத்தல? ஒன்பது. திருக்குறள்ல கோடி என்ற நம்பர் எத்தனை திருக்குறள்ல வருது? ஏழு முறை வந்திருக்கும். எல்லா திருக்குறளும் பார்த்தீங்கன்னா ஏழு சீராலான குறள் வெண்பாக்கள் ஆனது. இதுல அதிகாரம் 133 அதிகாரத்தை கூட்டினாலும் ஏழுதான் வரும். 1330 குறளையும் கூட்டினாலும் ஏழுதான் வரும். அந்த ஏழு வந்து எத்தனை திருக்குறள்ள வருது? எட்டு இடங்கள்ல வந்திருக்கு. திருக்குறள் முதல் முதல்ல எப்ப அச்சிட்டாங்க சந்தியா? 1812. திருக்குறள் எதுல தொடங்கி எதுல முடியுது? அகரத்துல தொடங்கி நகரத்துல முடியும். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முற்றுறே உலகு. ஊடுதற் காமத்திற்கின்பம் அதற்கின்பங் கூடி முயங்கப் பெறின். திருக்குறளுக்கு முதல் முதல் உரை எழுதுனது யாரு? மணக்குடவர். அதில் சிறந்த உரை யாரு? பரிமேலழகர். காலத்தால் மூத்தவர் யாரு? தருமர். சந்தியா திருக்குறள்ல மொத்தம் எத்தனை எழுத்து இருக்கு? 42,194. அதுல அதிகமா பயன்பட்ட எழுத்து இது? னி ரன்னகர னி பயன்படுத்திருக்காங்க. 1705 முறை. ரஷ்யால அணு துளைக்காத க்ரெம்லின் மாளிகையில வச்சு பாதுகாக்குற ஒரு தமிழ் நூல் என்னன்னு உனக்கு தெரியுமா? திருக்குறள். ரஷ்யால மட்டும் இல்ல இங்கிலாந்துல ஒரு அருங்காட்சியகத்துல பைபிள் கூடயும் வச்சு பாதுகாக்கப்படுது. அதுமட்டும் இல்ல இங்கிலாந்து நாட்டை சேர்ந்த விக்டோரியா மகாராணி காலையில எழுந்ததுமே படிச்ச முதல் நூலு திருக்குறள் தான். அப்படியா சூப்பர். திருக்குறள்ள ஒரே ஒரு தடவை பயன்படுத்தப்பட்ட எழுத்துகள் எத்தனை? ரெண்டு எழுத்துகள் பெரிய லி அதாவது புழலகர லீனு சொல்லுவாங்க அடுத்து கக்கு அடுத்து வர ன. சந்தியா திருக்குறளுக்கு ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் எழுதப்பட்ட மணக்குடவர் உரைய அச்சிட்டு வெளியிட்டது யாரு? வ.உ.சிதம்பரனார் தன்னை தானே திருக்குறள் அன்பர்னு அழைச்சிக்கிட்டாரு. வ.உ.சி என்ன சொல்லி இருக்காருன்னா 1330 திருக்குறளையும் பொருளுடன் உணர்ந்திடாத தமிழர் முற்றும் துறந்த முனிவராயினும்... தான் பெற்றெடுத்த பிள்ளையாயினும், தன்னை பெற்றெடுத்த தந்தையாயினும் அவர்களை நான் முழுமையாக மதிப்பதும் இல்லை நேசிப்பதும் இல்லைன்னு சொல்றாரு. அதனால நாம எல்லாருமே வ.உ.சியோட வரிகளுக்கு ஏற்ப திருக்குறளை பொருளோடு கட்டாயம் தெரிஞ்சுக்கணும்ங்க. இறைவன் மனிதனுக்கு சொன்னது எது? இறைவன் மனிதனுக்கு சொன்னது கீதை, மனிதன் இறைவனுக்கு சொன்னது திருவாசகம், ஒரு மனிதன் மனிதனுக்காக சொன்னதுதான் திருக்குறள். நம்ம என்டர்டைன்மென்ட் வீடியோ எதுவும் போடாம திருக்குறளை வச்சு ஏன் ரீல்ஸ் போட்டுட்டு இருக்கோம்? ஏன்னா திருக்குறள் ஒரு நீதிநூல் மட்டும் இல்லாம அது ஒரு வாழ்வியல் நூலும் கூட. இந்த உலகத்துல ஒரு மனிதன் எப்படி வாழணும், எப்படி வாழக்கூடாது அப்படின்றத எளிமையா சொல்லக்கூடிய நூல்தான் திருக்குறள். அதை எளிமையான முறையில மக்கள்ட்ட கொண்டு போய் சேர்க்கணும்ன்றதுதான் நம்மளுடைய இலக்கமே. சரி சந்தியா திருக்குறளோட முன்னோடி என்ன? புறநானூறு. திருக்குறளோட விளக்கம்? நாலடியார். குட்டி திருக்குறள்னும் நாலடியார் சொல்லப்படுது. திருக்குறளோட பெருமையை உணர்த்துற நூல் எது? 53 புலவர்களால் எழுதப்பட்ட 55 பாடல்களைக் கொண்ட திருவள்ளுவ மாலை. தமிழுக்கே கதின்னு சொல்ற நூல்கள் எதேது? கதி என்றால் கக்கு கம்பராமாயணமும், திக்கு திருக்குறளும் கதினு சொல்லப்படுது. அதாவது தமிழுக்கே கதின்னு அழைக்கப்படக்கூடிய நூல்கள். திருக்குறள முதல் முதல் மொழிபெயர்த்தது யாரு? வீரமாமுனிவர் லத்தீன் மொழியில 1730ல மொழிபெயர்த்தார். அப்ப ஆங்கிலத்துல மொழிபெயர்த்தது யாரு? கிண்டஸ்லி ட்ரை பண்ணாரு. அடுத்து எல்லிஸ் துரை 13 அதிகாரங்களை மொழிபெயர்த்தார். அதுக்கப்புறம்
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS



